பாகுபலி பட நடிகர் கைது! மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலை செய்ய வைத்தாரா?

பாகுபலி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் தெலுங்கு நடிகர் மது பிரகாஷ். அவரது மனைவி பாரதி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் தற்கொலைக்கு மது பிரகாஷ் வரதட்சணை கொடுமை செய்தது தான் காரணம் என புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது பிரகாஷ் மற்றும் பாரதி ஆகியோர் திருமணம் 2014ல் நடைபெற்றது. 15 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையிலும் ஆரம்பம் முதலே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.

நடிகராக இருக்கும் மது வீட்டுக்கு லேட்டாக வருவது தொடர்பாக அடிக்கடி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை நடந்துவந்தது என பாரதியின் பெற்றோர் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.