கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவர் சரவணன்.
இவர் இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி படிக்கும் போது பெண்களை இடிப்பதற்காக பஸ்ஸில் செல்வேன் என கூறியதற்காக நேற்று முன் தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ரசிகர்கள் மத்தியில் சரவணன் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களின் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
https://twitter.com/TN_Theatres/status/1158425491323310080
இதற்காக அச்சங்கம் பதிவிட்டுள்ள டீவீட்டில் சரவணன் வெளியேற்றப்பட்டது பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.