சேரன் ஜெயித்தாலும் பரவாயில்ல.. இவங்க ஜெயிக்கவே கூடாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் கடந்த வாரம் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய இவர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் மீராவிடம் பிக் பாஸ் டைட்டிலை யார் வெல்ல கூடாது என கேட்டுள்ளனர்.

அதற்கு மீரா சேரன் ஜெயித்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு போதும் அபிராமி, சாக்ஷி அகர்வால், ஷெரின் ஆகியோர் ஜெயிக்கவே கூடாது என கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் மூவரும் மிகவும் கொடூரமானவர்கள். சேரன் விசயத்தில் இவர்கள் யாருமே என்னுடைய உணர்வை புரிந்து கொள்ளவில்லை. சேரனுக்கு தான் ஆதரவாக இருந்தார்கள் என கூறியுள்ளார்.

சொல்லப்போனால் பெண்கள் என்னை புரிந்து கொண்டதை விட ஆண்கள் தான் புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்தார்கள் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.