நான் இருந்திருந்தா பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது! நாரடிச்சிருப்பேன்.! கொதித்த முன்னாள் போட்டியாளர்.!

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

தற்போது பிக்பாஸ் 3-வது சீசன் ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ல் இந்த வாரம் மதுமிதா, கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாதளவில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக நாமினேசன் செய்யப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க கிராமத்து டாஸ்கில் சாண்டி மதுமிதா இடையே பிரச்சனை எழுந்தது. ஆனால் சாண்டி மன்னிப்பும் கேட்டார். ஆனால் சாண்டியை காரி துப்பியதோடு, நீயெல்லாம் ஆம்பளையா என கேட்டதோடு கமல்ஹாசனிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து தற்போது பேசிய காஜல், மதுமிதா செய்தது தவறு. சாண்டி மன்னிப்பும் கேட்டுவிட்டார். இதே போல கவின், தர்ஷன், சாக்‌ஷி, முகேன் ஆகியோரிடம் மதுமிதா இப்படி நடந்துகொண்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது. நான் நாரடிச்சிருப்பேன். சாண்டிக்காக மட்டுமில்லை மற்ற யாருக்கு இப்படி பிரச்சனை என்றாலும் நான் தட்டிகேட்பேன்.வனிதா இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.