மீண்டும் எதிர்பாராத ட்விஸ்ட்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அடுத்த போட்டியாளர் இவர் தான்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 30 நாட்களை தொட்டு விட்டது. மேலும் கூடிய விரைவில் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கி விட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் 17 போட்டியாளர்களை முடிவு செய்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியாளர் கயல் ஆனந்தி தான் எனவும் ஓரளவிற்கு உறுதியாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை கொடுத்து புது போட்டியாளரை உள்ளே அனுப்பினால் நிகழ்ச்சி பட்டென சூடு பிடிக்கும் என்பதற்காகவே கடந்த சில நாட்களாக இந்த காதல் விவகாரத்தையே வைத்து மொக்கை போட்டு வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இதற்கு ஆதாரமாக விஜய் டிவி கயல் ஆனந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம்.

எஸ்.ஜே சூர்யா, பரத் போன்ற நடிகர்களுக்கு சாதாரணமான போட்டோக்களை வைத்து வாழ்த்து சொன்ன விஜய் டிவி, கயல் ஆனந்தியின் போட்டோவை சாக்ஷி அகர்வாலின் போட்டோவை போலவே கிரீன் மேட்டில் எடுத்து அதனை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதனால் இவர் தான் பிக் பாஸ் வைல் கார்ட் என்ட்ரி போட்டியாளர் என ஓரளவிற்கு உறுதியாக தெரிய வருகிறது. இது எந்தவிற்கு உண்மை ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

https://twitter.com/vijaytelevision/status/1152284469367324672


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.