எவ்ளோ பெரிய வார்த்தை சொல்லிட.! இரவில் கண்கலங்கி அழும் கவின்.!

பிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல், பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார்.

ஆனால் நாட்கள் செல்ல, செல்லத் தான் இவரின் உண்மையான குணம் வெளி வந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்து வருகிறார். ஆனால் கவினின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அவரிடம் வெறும் நட்பாக மட்டுமே பழகி வருகிறார்.இந்த சண்டை சமீபத்தில் பெரிய பூகம்பமாக வெடிக்க இருவரும் கவினை விட்டு விலகிவிட்டனர். அதனால் மனமுடைந்த கவின், சாக்ஷியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறையில் இருக்கும் சாக்ஷியிடம், கவின் அமர்ந்து கொண்டு பேசுவது போல் உள்ளது. ‘சாக்ஷி உண்மையாக உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன். எவளோ பெரிய வார்த்தை சொல்ற என்கிட்ட’ என்று கேட்கிறார். இதற்கு பதிலளித்த சாக்ஷி, ‘இனிமே நீயும், நானும் இல்லை. எப்படி எல்லாத்தையும் ஜாலியாக பேசுனன் சொல்ற?’ என்று கேட்க உடனே கவின் அழுது கொண்டே ‘என்னை மன்னிச்சிடு மச்சான்’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் கவினை தேவையில்லாமல் சீன் போடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.