சீரியல் கதையான நிஜ வாழ்க்கை..? சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெற்ற சீரியல்களில் முக்கியமானது ’பொன்மகள் வந்தாள்’. தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வந்த மேக்னா, இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்ற பிறகு சீரியலில் இருந்து அவர் விலகி விட்டார். அதேபோல, அதே சீரியலின் கதாநாயகனான விக்கி, வாணி ராணி தொடரில் தன்னுடன் நடித்த ஹரிப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் நடித்து வந்த சீரியலில், விருப்பமில்லாத திருமண உறவில் இணையும் ஹீரோவும், ஹீரோயினும், மணவாழ்க்கையை விடுத்து சுதந்திரமான முடிவெடுப்பது போல ’பொன்மகள் வந்தாள்’நாடகத்தின் கதை அமையும்.

தற்போது இந்த நாடகம் போல ஆகிவிட்டதாம் மேக்னா, விக்கி வாழ்க்கை. இருவருடைய தனிப்பட்ட மணவாழ்க்கை கசந்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இருவர் தரப்பிலும் விசாரிக்க முயற்சித்த போது, மேக்னாவின் செல்போன் ஸ்விட்ச் செய்யப்பட்டிருந்தது. விக்கியின் மனைவி ஹரிப்ரியாவும் போன் எடுக்கவில்லை. விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.