வனிதாவை அடுத்து குறிவைக்கப்படும் மீரா: இந்த வார நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று வெளியேற்றும் படலமும், திங்களன்று நாமினேஷன் படலமும் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறப்போகும் போட்டியாளர்கள் குறித்த நாமினேஷன் படலம் இன்று நடந்தது.

இதுகுறித்த புரமோ வீடியோவில், ‘மீராவை லாஸ்லியாவும், சரவணனை மோகன் வைத்யாயும், மோகன் வைத்யாவை சரவணனும், தர்ஷனை மீராவும், மீராவை சேரனும், மீராவை தர்ஷனும், சரவணனையும் மீராவையும் ஷெரினும், அபிராமியை சாக்சியும் நாமினேட் செய்துள்ளனர். வழக்கம்போல் சாண்டியை யாரும் நாமினேட் செய்யவில்லை. கவின், மதுமிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்களா? என்பது நிகழ்ச்சியின் முழு வடிவத்தில்தான் தெரிய வரும்.

இந்த புரமொவில் இருந்து மீராமிதுன், சரவணன் மற்றும் தர்ஷன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்த பட்டியலில் இன்னும் யார் யார் இணைந்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வனிதா இல்லாத பிக்பாஸ் வீடு அமைதியாக இருக்குமா? அல்லது வனிதாவை பொறுப்பை வேறு யாராவது கையில் எடுப்பார்களா? என்பதும் போகப்போகத்தான் தெரியும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.