நயன்தாராவை அடுத்து அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகிபாபு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் ஒரு ஜாலியான கேரக்டரில் யோகிபாபு நடித்திருப்பார். அவருக்கு அந்த படத்தில் ஒரு பாடலும் உண்டு. இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து அஞ்சலியுடன் ஒரு படத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் பிகில் உள்பட பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பேஸ்கட்பால் விளையாட்டு குறித்த படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்புக்கொண்டுள்ளார். பேஸ்கட்பால் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் கேரக்டரில் அஞ்சலியும், அவரை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் தொலைக்காட்சி புகழ் ராமர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அஞ்சலியும் யோகிபாபுவும் ‘லிசா’ என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனே அஞ்சலி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், பேஸ்கட்பால் வீராங்கனை கேரக்டரில் நடிக்க அவருக்கு சில நாட்கள் பேஸ்கட்பால் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் கிருஷ்ணன் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையில் இயக்குனர் சினிஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.