கமல்ஹாசனான் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களின் இருவர் ஈழத்து தமிழர்கள். அவர்கள் லாஸ்லியாவும் தர்ஷனும் தான்.
இவர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்பளித்ததற்காக ஈழத்து தமிழர் ஒருவர் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நீங்களும் மற்ற அரசியல்வாதிகள் போல் ஈழத்து தமிழர்களை வைத்து அரசியல் பேசாதீர் அந்த மேடையில் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அரசியல் வாதிகள் அரசியலுக்காக தான் எங்களை பற்றி பேசுகிறார்களே தவிர நாங்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசுவதில்லை, நீங்களாவது இந்த மேடையில் பேசுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை விஜய் டிவி பிரபலமான அபித் பார்கவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.