எதற்காக விசுவாசம் படத்திற்கு மட்டும் இப்படி செய்தீர்கள்..!! தயாரிப்பாளரிடம் கடுப்பாகிய அஜித்..!!


ஒட்டுமொத்த திரையுலகமுமே ஸ்ட்ரைக்கில் கிடக்கிறது ஆனால் விசுவாசம் படத்துக்குமட்டும் என்ன விதிவிலக்கு என படத்தின் தயாரிப்பாளரை ஒரு காட்டு காட்டியுள்ளார் அஜித்.

கியூப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திவருகிராகள், அதனால் மார்ச் 1 முதல் எந்த புது தமிழ் படமும் ரிலீஸ் செய்வதில்லை, மேலும் மார்ச் 16 முதல் திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்படும், மற்றும் போஸ்டர் பணிகளும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்கள்.


திரைத்துறை அனைத்தும் ஸ்ட்ரைக் நடத்தும் பொது விசுவாசம் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் மட்டும் மிக தீவிரமாக நடந்து வருகிறது, இன்னும் விசுவாசம் படம் ஷூட்டிங் தொடங்கவில்லை, படத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்திவிட்டால் பல கொடிகள் நஷ்டம் அடைய கூடும் படத்தின் தயாரிப்பாளர், அதனால் தயாரிப்பு சங்கத்திடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார் விசுவாசம் தயாரிப்பாளர்.

சிறப்பு அனுமதி கேட்டதை அறிந்த தல அஜித், அனைவரின் நலனுக்காகவும் தான் ஸ்ட்ரைக் நடக்கிறது, இதில் நாம் மட்டும் நலம் பெறுவது தவறு, முன்னால் தலைவரான நீங்களே முழு ஒத்துழைப்பு தாராமல் சிறப்பு அனுமதி ஏன் கேட்டீர்கள் என அஜித் ஒரு காட்டு காட்டியுள்ளார் தயாரிப்பாளரை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி