ஆடை சர்ச்சையால் கிடைத்த வாய்ப்பை இழந்த அமலா பால்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். தொடர்ந்து விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டதிலிருந்து சினிமாவை விட்டு விலகினார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். எந்த நடிகருடன் ஜோடி சேரும் நிலைக்கு வந்தார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இயக்குனர் ரத்னவேல் இயக்கத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆடை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அப்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில், ஆடையின்றி வரும் காட்சியில் தோன்றிய அமலா பாலை பலரும் விமர்சனம்செய்தனர். தற்போது இந்தப் படமே அவருக்கு பெரிய எதிரியாக மாறியுள்ளது.

ஆம், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் விஎஸ்பி33 என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆடை படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து விஎஸ்பி33 என்ற இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்திலிருந்து அதிரடியாக தூக்கி எறியப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சிம்பு நடிப்பில் வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஹீரோயின் மேகா ஆகாஷ், விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை படத்திலிருந்து தூக்கி எறிந்தது குறித்து கோபத்தில் பொங்கு எழுந்த அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தை தயாரிக்கும் சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் எப்போதும் அவர்களது பட்ஜெட் சிக்கலை கொண்டிருக்கும். அதனால், இப்படத்திற்காக எனக்கு ஆகும் மொத்த செலவுகளையும் நானே பார்ப்பதாக ஒப்புக்கொண்டிருந்தேன். மேலும் இப்படத்தில் கொஞ்சம் மாடர்னாக, ஸ்டைலிஷ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு டிரெஸ் எடுக்க வந்திருக்கிறேன்.

அப்படியிருக்கும் போது தயாரிப்பாளர் ரத்தினவேல் குமார், இப்படத்தில் நான் தேவையில்லை என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் என்னை படத்திலிருந்து நீக்கியது வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான நான், அவருடன் இணைந்து நடிப்பதில் அதிக ஆர்வமாக இருந்தேன். இது அவருக்கு எதிரானது ஒன்றும் இல்லை. என்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வரும் சந்திரா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.