லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போதே தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்க துவங்கி விட்டார் விஜய்.
மேலும் மகிழ் திருமணி, பிரதீப் ரங்கநாதன், போன்ற பல இயக்குனர்களின் பெயர்கள் இதில் அடிபட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற படத்தை இயக்கி வரும் சுதா கே பிரசாத் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும், விஜய்யிடம் இவர் கதை கூறி இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இது எந்த அளவிற்க்கு உண்மை என்பது அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!