செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலியும் முன்னாள் செவிலியர் என்ற அடிப்படையில் பங்கெடுத்துள்ளார்.
ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்தமாக கெடுத்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே.
பிக்பாஸுக்கு பின் விஜய் டி.வி யில் வேலை கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்த ஜூலி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓடி விளையாடு பாப்பா என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஜூலியும் இன்று கலந்து கொண்டுள்ளார்.
தன்னையும் உள்ளே போராட அனுமதிக்குமாறு காவல்த்துறையினருடன் ஜூலி முறையிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் வருவதற்கு முன் ஜூலி ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!