ஹிந்தியில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்: மகேஷ் பாபு பேச்சால் சர்ச்சையும், வந்திருக்கும் விளக்கமும்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் நடித்திருக்கும் Sarkaru Vaari Paata படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த படத்தின் விழா ஒன்றில் மகேஷ் பாபுவிடம் ஹிந்தி படத்தில் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனக்கு பல ஹிந்தி பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் தான் ஹிந்தியில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என கூறி இருக்கிறார்.


மகேஷ் பாபு இப்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி சினிமா துறையை பற்றி மோசமாக இப்படி கூறிவிட்டாரே என பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் மகேஷ் பாபு பேசியது ஊதி பெரிதாக்கப்பட்டு இருக்கிறது என விளக்கம் கொடுத்து இருக்கின்றனர்.

மகேஷ் பாபு அனைத்து சினிமா துறையையும், மொழிகளையும் மதிப்பவர் என்றும், அவர் அடுத்து எஸ்எஸ்ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் படம் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும் pan இந்தியா படம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த விளக்கம் மூலமாக மகேஷ் பாபு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!