விஜய் டிவியில் காமெடியன்களாக இருப்பவர்கள் அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி. இவர்கள் சமீபத்தில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேடையில் காமெடியாக பேசியுள்ளனர்.
மேடையில் பாஜக மற்றும் அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழசை சௌந்தர்ராஜனை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுபற்றி பலரும் கண்டனம் தெரிவித்து அவருக்கு போன் செய்தார்களாம்.
இந்நிலையில் இது பற்றி மன்னிப்பு கேட்டு அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
“நான் பேசியது தவறுதான். இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. திரும்ப இப்படி நடக்க வாய்ப்பே இல்லை” என கூறி நிஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.