அதுக்குனு இவ்வளவு கேவலமாகவா? ஓராண்டு நட்பை கொண்டாடிய பிக் பாஸ் சீசன்-2 தோழிகள்!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வசீகரத்தை ஏற்படுத்தியது. முதல் இரண்டு பாகங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், விரைவில் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் – 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன் பின் தெரியாத நிலையில், இந்த நிகழ்ச்சி மூலம் இருவரும் நட்பாகினர்.

இவர்கள் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். எதிரெதிர் அணியில் இருந்தாலும், ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைபெற்ற சூழலில், ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டனர்.

இவர்களின் நட்பை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன் மிகவும் பாராட்டினார். 100 நாட்கள் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும், இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. இவர்களின் நட்பு தொடங்கி, ஓராண்டு முடிவடைந்துள்ளது.

https://www.instagram.com/p/ByNlXICFTZY/?utm_source=ig_embed

இதனைக் கொண்டாடும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார். அதில், ”எனது மகிழ்ச்சியான இடம்! என்னுடைய பைத்தியக்கார தோழி உடனான நட்பு ஓராண்டை எட்டியுள்ளது.

நீ என்னுடைய வாழ்க்கையில் ஒளியேற்றி விட்டாய் ஐஸ்வர்யா!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா, ”ஓய் பேபி லவ் யூ” என்று தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி, பிஸியாக நடித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.