செம்பருத்தி சீரியலிலிருந்து விலகி சன் டிவி சீரியலுக்கு வந்தது ஏன்? ஷாம் சொன்ன அதிர்ச்சி காரணம்

தமிழ் தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், டி.ஆர்.பியில் நம்பர் ஒன் சீரியலாக இருப்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சிரீயல் தான், அந்தளவிற்கு தமிழக ரசிகர்களை இந்த சீரியல் சுண்டி இழுத்திருக்கிறது என்று கூறலாம்.

அப்படி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில், ஷாம் கேரக்டரில் நடிகர் ஷாம் நடித்திருப்பார். இதில் அவரின் பங்களிப்பு அதிகம் இருந்தது. எப்படி ஷபானா காதல் ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ, அதே போன்று ஷாம்மிற்கும் பெண்களின் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் ஷாம் இந்த சீரியலிலிருந்து திடீரென்று விலகிவிட்டதாகவும், இனி இவருக்கு பதில் வேறொருவர் என்று அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சையாக இருந்தது.

அதுமட்டுமன்றி ஷாம் சன் டிவி சீரியலில் நடிக்கத் துவங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பணம் அதிகம் கொடுத்திருப்பாங்க, அதான் சன் டிவிக்கு போய்விட்டார் என்று கமெண்ட் செய்து வந்த நிலையில், அவர் செம்பருத்தி சீரியலிருந்து விலகியது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.

அதில், எனக்கு வாழ்க்கை கொடுத்தே செம்பருத்தி சீரியல் தான், அப்போது எனக்கு சன் டிவி சந்திரேகலேகா சீரியலில் வாய்ப்பு வந்தது. இதனால் இரண்டு சீரியல்களிலும் நடிக்கலாம், ஆனால் செம்பருத்தி தான் எனக்கு முக்கிய என்று கூறியிருந்தேன்.

அதன் படி கூறி ஒரு நாள் கூட ஆகவில்லை, திடீரென்று செம்பருத்தி சீரியலில் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஒரு போன் கால் வந்தது. அப்போது அவர் சாரி ஷாம், சில கசப்பான காரணங்களால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

உங்களுக்கு பதிலாக வேறொருவரை தேர்வு செய்துவிட்டோம் என்று கூறினர். அப்போதே நான் நொந்துவிட்டேன், ஆனால் இப்போது வரை என்ன காரணம் என்று தெரியவில்லை, மீண்டும் என்னை செம்பருத்தி சீரியலில் நடிக்க அழைத்தால் நடிப்பேன் என்றே கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.