தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?

இப்போதெல்லாம் ஒரு படத்தை விளம்பரம் செய்ய சோஷியல் மீடியோ மிகவும் அவசியம். இதை உணர்ந்த துருவ், சமூக வலைதளமான டிவிட்டரில் இணைந்துள்ளார்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

இப்படத்தை குறுகிய கால படமாக முடித்து வெளியிடுவதாக படக்குழு சொல்லி இருந்தனர். தற்போது அதை பின்பற்றி முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம் ஒரு படத்தை விளம்பரம் செய்ய சோஷியல் மீடியோ மிகவும் அவசியம். இதை உணர்ந்த துருவ், சமூக வலைதளமான டிவிட்டரில் இணைந்துள்ளார்.

மேலும் விக்ரம் டிவிட்டரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.