கந்து வட்டி புகாரை திரும்ப பெற்ற தயாரிப்பாளர்..!! அதிர்ச்சியடைந்த சசிகுமார்..!!


சசிகுமாரின் நெருங்கிய உறவினர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொடிவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல முறை தள்ளிபோனநிலையில் இந்த வாரம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படம் டிசம்பர் 7ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக வாங்கிய கடன் பற்றிய பிரச்சனையால் தான் தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை செய்துகொண்டார் என கடிதத்தில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் சி.வி.குமார் கொடுத்த கந்துவட்டி புகாரை தற்போது திரும்பப்பெற்றுள்ளார். அதனால் இனி அன்புச்செழியனை போலீஸ் கைது செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#