மறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதா?- அவரது மனைவியே போட்ட பதிவு

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார்.

இவருக்கும் நடிகை மேக்னா ராஜிற்கும் கடந்த 2008ம் ஆண்டு படு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. சந்தோஷமாக அவர்கள் வாழ திடீரென இவ்வருடம் ஜுன் 7ம் தேதி சிரஞ்சீவி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது மரணம் கன்னட சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வைரலாக பரவியது.

ஆனால் அது உண்மை இல்லையாம், தனக்கு அப்படி ஒன்று நடந்தால் கண்டிப்பாக அந்த செய்தி உங்களுக்கே நான் தெரிவிக்கிறேன், வதந்தியை நம்ப வேண்டாம் என மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!