ஏன் இப்படி செஞ்சீங்க? நடிகை பிரியா பவானி சங்கர் கோபம்!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை வாய்ப்பு கிடைத்து, தற்போது வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். இவர் வைபவ் நடிப்பில் வெளியான ’மேயாத மான்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

இதையடுத்து கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் நடித்த ‘மான்ஸ்டர்’ சமீபத்தில் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தொடர் பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் இருந்தவரை, ஒரு விஷயம் கோபப்பட வைத்துள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையறிந்த அவர், மிகுந்த கோபம் கொண்டுள்ளார்.

https://twitter.com/PriyaBShankar_/status/1130371643082067968

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போலி கணக்கு ஒன்றிற்கு பதிலளிக்கும் வகையில், ”அன்பார்ந்த போலி கணக்காளரே! டுவிட்டரில் எதையாவது பதிவிட வேண்டும் என்ற உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது.

ஆனால் மணிக்கு ஒருமுறை எனக்கு தொல்லை தரும் வேலையாக அதைச் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவரைப் போல் பல்வேறு நடிகர், நடிகைகளுக்கு போலி சமூக வலைத்தளக் கணக்குகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என்று நம்பி ரசிகர்கள் ஏமாற வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.