மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்!

நடிகரும், அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜே கே ரித்தீஷ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜேகே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி, தன்னை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவருடைய வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஜேகே ரித்தீஷிடம் பணியாற்றி வருகிறேன். அவருக்கு சொந்தமான வீட்டில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் தங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதற்காக அவரிடம் நான் பணி செய்வதற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

அப்படியிருக்கும் போது, அவருடைய மனைவி ஜோதீஸ்வரி வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்துகிறார். அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். மேலும், தனக்கு வர வேண்டிய ரூ.4 லட்சம் பணத்தையும் தர மறுக்கிறார். அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். இவரைப் போன்று தயாரிப்பாளரான ஐசரி கணேஷூம், ஜோதீஸ்வரியிடம் வீட்டை கொடுத்துவிட்டு வெளியேறுமாறு தொலைபேசியில் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

கேசவன் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் ஜேகே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.