சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் சசிகலா ரோலில் சாய் பல்லவி நடிப்பதாக சொல்லப்பட்டது. நடிகை சாய் பல்லவியும் விஜய்யும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததுதான்.

அதனால் தன்னுடைய காதலருக்காக சாய் பல்லவி இப்படியொரு சர்ச்சைக்குரிய ரோலில் நடிக்க சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலை சாய் பல்லவி தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவி கூடிய விரைவில் கன்னட படமொன்றில் நடிக்கவுள்ளாராம்.

இவரை மையப்படுத்திய இப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகவுள்ளதாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.