புஷ்பவன குப்புசாமிக்கு செமையா பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியனரையும், விஜய் டிவியையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார் பிரபல நாட்டுபுற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி.

நாட்டுப்புற பாடல்களில் இவர்களை விட புஷ்பவனம் குப்புசாமி மிகவும் சீனியர், அவர் பாடியுள்ள பல பாடல்கள் வெற லெவலில் ஹிட் அடித்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புஷ்பவனம் குப்புசாமி, பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம், மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் மனைவியை தன் பக்கத்தில் வைத்துகொண்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்.

இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறேன் என்று கடுமையாக பேசி இருந்தார்.

இதைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்த செந்தில் கணேஷ் முதல் முறையாக இதைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்கள் எங்கே இருக்கிறது. நாங்களும் எங்கள் மூத்த கலைஞர்கள் எழுதிய பாடல்களை நாங்க பாடியுள்ளோம்.

கலைஞர்கள் பாடும் போது அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் நாங்கள் அதனை மாற்றி பாடி விடுவோம். ஒரு பழ மொழி சொல்லுவாங்க ஆகாதவன் பொண்டாட்டிக்கு கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் அப்படி தான் இருக்கிறது அவரது பேச்சு.

அவர் மற்றும் தான் நாட்டுபுற பாடகரா? நாங்கள் எங்கள் பகுதியில் கற்றுக்கொண்ட பாடலை தான் நான் பாடுகிறேன். இதில் இரட்டை அர்த்தம் எங்கும் கிடையாது, யாரையும் நான் தொட்டு கூட பாடுவது இல்லை. எங்கள் மக்களுக்காக நாங்கள் படுகிறோம் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.