கோலிவுட் சினிமாவில் ‘தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தை அடுத்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஷால் – காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா தத்தா. அதையடுத்து அவர் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். எனவே, தற்போது சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் காதலில் இருப்பதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், யார் என அவர் தெரிவிக்கவில்லை. எனவே, அது யார் என ரசிகர்கள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Past is past cannot change it … sumtimes in life we can trust people we can give love to them but we can’t change their habits and behaviour.. what we can do is to move on and see our own life ..but I prefer to see what’s next and always being excited to welcome that … ❤️
— Aishwarya dutta (@Aishwaryadutta6) May 8, 2019
தற்போது அவர் நடிகர் சிம்புவின் மீதுதான் காதல் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சிறு வயது முதல் நட்பு உண்டு எனக்கூறப்படுகிறது. தனது காதலை சிம்புவிடம் ஐஸ்வர்யா தத்தா கூறினாராம். ஆனால், என் மனதில் அது போல எண்ணம் ஒன்றுமில்லை என அவரின் காதலை ஏற்க சிம்பு மறுத்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.