முகெனுக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்த அபிராமி…! அபிராமிக்கு அந்த மோதிரத்தை யார் கொடுத்தது?

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுமே சில உன்னதமான காதலர்களை உருவாக்கி மகிழும் போல. அதுவும் சொல்லி வைத்தாற் போல ஒவ்வொரு சீசனிலுமே பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாள் வேலை வாய்ப்பு போல 100 நாட்களுக்குள் காதலர்கள் உருவாகி விடுகிறார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் முதன்முதலாக காதல் கதையை ஆரம்பித்து வைத்து பிள்ளையார் சுழி போட்டது நடிகை அபிராமி தான். ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே பிக்பாஸ் வீட்டில் நிலவி வந்தது.

எபிசோட் துவக்கத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர் கவினைக் கழற்றிவிட்டு, முகெனை காதலிக்க துவங்கினார். பின்னர் அவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தரமாக கூறி வந்தார். ஆனால், அபிராமி நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக் கொண்டு செம பீலீங்ஸ் காட்டியபடியே இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

நன்றாக போய்க் கொண்டிருக்கும் காதல் கதையில் வில்லன் இருக்க வேண்டுமல்லவா… இந்த எபிசோடில் வில்லியாக உள்ளே வனிதா நுழைந்தார். வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி ஆன பின்னர் அபிராமியிடம் முகென் குறித்து ஏதேதோ சொல்லி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறிய போது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார். சமீபத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த போது அவருக்கு அவரது டி-ஷர்ட் கூட அளித்து இருந்தார் முகென். இந்த நிலையில் அபிராமியும் முகெனுக்கு ஒரு மோதிரம் ஒன்றை அன்பு பரிசாக அளித்துள்ளார். அந்த மோதிரத்தை ஈஷா யோகாவில் இருந்து அபிராமிக்கு பரிசாக அளித்திருந்தார்கள். அதனை அபிராமி எப்போதும் அணிந்து கொண்டு இருந்தார். ஒரு மோதிரம் சில காதல்களையும், பல மோதல்களையும் உருவாக்கி வருகிறது!


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.