தாடி பாலாஜிக்கு பயந்து டெல்லிக்கு செல்லும் மனைவி நித்யா..!

நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் பிக் பாஸ் பிரபலம் நித்யா பாலாஜி, தமிழகத்தில் போட்டியிடாததன் காரணத்தை விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 2 மூலம் பிரபலமானவரும் கொமடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுமான நித்யா தேசிய பெண்கள் கட்சி சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக விளக்கமளித்த அவர், காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன். ஆனா, நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப்பத்தி அவதூறு பரப்பணும்கிற ப்ளான் வச்சிருந்தார் பாலாஜி.

ஏன், டெல்லியில எங்களோட தேசியக் கட்சியின் நிர்வாகிகளுக்கே குடிச்சுட்டுப் போனைப் போட்டு, அவளெல்லாம் கட்சித் தலைவியானு கேட்டு லந்து பண்ணியிருக்கார் என்றார்.

ஆனால், இவர் சொன்ன எதையும் காதுல வாங்கிக்காத எங்க கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில போட்டியிட அறிவுறுத்தினாங்க.

வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலா வசிக்கிறது எனக்கு சாதகமா இருக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால சரின்னு சொல்லிட்டேன் என நித்யா தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.