நயன் பக்கத்துல எனக்கும் ரூம் வேணும்! கடுப்பான ‘தர்பார்’ பட தயாரிப்பாளர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, ஷூட்டிங்கில் பங்கேற்க நேற்று மும்பை சென்றுள்ளார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். நயன்தாரா எங்கு சென்றாலும் அவர் கூடவே சென்று பட தயாரிப்பாளர்களுக்கு செலவை வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதேபோல் நேற்று நயன்தாரா கூடவே மும்பை வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நயன்தாரா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருக்கும் அறை பக்கத்தில் தனக்கு அறை ஒதுக்கி தர வேண்டும் என தர்பார் பட தயாரிப்பாளரை கேட்டுள்ளாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மீது செம கடுப்பில் உள்ளாராம்..


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.