மகன் திருமண அழைப்பிதழ் கொடுத்த டி.ராஜேந்தர்! அப்போது நடந்த சுவாரஸ்யத்தை கூறிய விஜயகாந்த்!

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர். என திரையுலகில் பன்முகம் கொண்டு விளங்குவதோடு, அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர் டி.ராஜேந்தர்.

இவரின் இளைய மகன், குறளரசன் திருமணத்திற்காக நடிகரும், தேமுதிக தலைவருமான, விஜயகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பு கொடுத்துள்ளார். அப்போது தங்களுடைய மலரும் நினைவுகள் பற்றி பேசியதாக விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறளரசன் சமீபத்தில் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறினார். ஆரம்பத்தில் இதனை மறுத்த குறளரசன் பின் மதம் மாறியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து இவர் மதம் மாறியதற்கான காரணம், இவர் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டது.

மேலும் இவரின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் கசிந்து வந்தன. ஆனால் இதுகுறித்து ஒருமுறைகூட டி.ராஜேந்தர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டி.ராஜேந்திரன் குறளரசன் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட விஜயகாந்த் இது குறித்து சமூக வலைதளத்தில் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில் “இயக்குனர்-இசையமைப்பாளர்-நடிகர்lசகோதரர் விஜய டி ராஜேந்தர் அவர்கள் எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவு கூர்ந்தோம். என்றும் குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

டி.ராஜேந்தர், விஜயகாந்த் நடித்த ‘கூலிக்காரன்’ படத்தில் படத்திற்கு இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.