“எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் மகேந்திரன்”…நெகிழும் சூப்பர் ஸ்டார்…!

எனக்குள் இருக்கும் இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் தான். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,”இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. ‘முள்ளும் மலரும்’, ’ஜானி’ படங்கள் மூலம் எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். என் வாழ்நாள் உள்ளவரை அவரை நான் நன்றியுடன் நினைவுகூர்வேன்” என்று கண்களில் நீர்கோர்க்கப் பேசினார் ரஜினி.

மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள மகேந்திரன் ரஜினியை வைத்து மட்டுமே ‘முள்ளும் மலரும்’,’ஜானி’,’கை கொடுக்கும் கை’ ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாலிவுட், ஹாலிவுட், மற்றும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் ஆச்சரியப்படும்படி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள ‘ராயல் உமைத் பவன் பேலஸில் வெகு விமர்சையாக நடந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாலிவுட், ஹாலிவுட், மற்றும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் ஆச்சரியப்படும்படி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள ‘ராயல் உமைத் பவன் பேலஸில் வெகு விமர்சையாக நடந்தது.

மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். எனினும் மிகவும் குறைவான வயதுடைய நிக் ஜோனாஸை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொள்கிறார் என ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் திருமணமான மூன்றே மாதங்களில் இவர்களுடைய திருமண உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா ஊடகமான ‘gossip . com ” தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி ஹாலிவுட் முதல் அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பிரிவுக்கு காரணமாக கூறப்படுவது, ஆரம்பத்தில் தன் காதலனுடன் இனிமையாக நடந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அவரை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அடிக்கடி கோப முகத்தை காட்டி கடுமையாக சண்டை போடுகிறாராம்.

மேலும் குறிப்பிட்ட வயதை தாண்டிய பின்னும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல், தொடர்ந்து திரைப்படம் நடிப்பது குடி – கும்மாளம் என நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடும் பிரியங்கா குடும்பத்தை கவனிக்காமல் இருப்பதுதானாம்.

இதனால் விரக்தி அடைந்த நிக் ஜோனாஸ் குடும்பத்தினர் பிரியங்காவை விவாகரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறார்களாம். நிக் ஜோனாஸ் ஒரு நிலையில் வெறுத்துப் போகவே விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பார் என்றும் கூறியுள்ளது.

ஆனால் இதுவரை இந்த விவாகரத்து செய்தி குறித்து நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தரப்பிடம் இருந்து, எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.