சில எபிஸோடுகளிலேயே கடைக்குட்டி சிங்கம் தொடரிலிருந்து வெளியேறிய ஷிவானி… காரணம் இதானாம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கடைக்குட்டி சிங்கம் தொடரிலிருந்து அதன் ஹீரோயின் ஷிவானி வெளியேறி உள்ளது பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

கடைக்குட்டி சிங்கம் தொடர் தொடங்கி ஒரு மாதம் கூட முழுவதுமாக முடியாத நிலையில், அந்த தொடரிலிருந்து கதாநாயகியான ஷிவானி வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக இரா அகர்வால் ஹீரோயின் ஆகி உள்ளார்.

இதுகுறித்து ‘கடைக்குட்டி சிங்கம்’ யூனிட்டில் சிலரிடம் பேசும் போது, ‘பகல் நிலவு’ தொடர் வெற்றிகரமாக ஓடி முடிந்தது. ஆனால் அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போதே இரண்டு மெயின் ஜோடிகள் வெளியேறினர். அப்போது முதல் அதில் நடித்து வந்த அசீம் – ஷிவானி ஜோடிக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்கன்னு ஒருவர் சொல்கிறார்.

மற்றொருவரோ, கடைக்குட்டி சிங்கம் தொடரில் தயாரிப்பாளருக்கு சொந்தமான ஒருவர் நடிப்பதாகவும், அவரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் தொடரிலிருந்து வெளியேறி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். எது உண்மை என்பதை ஷிவானிதான் சொல்ல வேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.