ஒரு கதைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த இயக்குனர் அட்லீ.. தயாரிப்பாளர் ஷாக்!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் தோல்வியே கண்டிராத இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ.

இவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா இணைந்து நடித்து வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் வெற்றி படத்தை தமிழ் ரசிகர்களுக்கும் வழங்கினார்.

மேலும் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து மெர்சல், பிகில் என இரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் தெறி படத்தை முதலில் கலைப்புலி எஸ். தானு தயரிக்கவில்லை, வேறொரு நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் எஸ். தாணு இப்படத்தை தனது தயாரிப்பில் வாங்கிவிட்டார்.

மேலும் முதலில் தயாரிக்க இருந்த நிறுவனத்திடம் இருந்து கதையை உருவாக்க இயக்குனர் அட்லீ சில நாட்களை எடுத்துகொண்டு தயார் செய்துள்ளார்.

பின்பு எஸ். தாணு விடம் வந்த பிறகு அந்த நிறுவனம் நாங்கள் கதையை தயார் செய்ய செலவழித்த தொகையை கொடுங்கள் என அட்லீ யிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு உடனடியாக அந்த தொகையை செட்டில் செய்ய வேண்டும் என கேட்ட அட்லீ மொத்தம் ரு 95 லட்சம் என கூறியுள்ளார். இதற்கு ஒரு கதையை மட்டும் தயார் செய்ய 95 லட்சம் ஆகியத என ஷாக்காகி இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!