சினிமா என்று கூறினாலே பல புதுமுகங்கள் பல வகையில் முயற்சி செய்து பிரபலமாக வேண்டும் என்று பாடுபடுவது வழக்கமான ஒன்று.
பிரபலம் என்ற பெயரை பெற்ற பிறகும் கூட, பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள சிலர் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். அதனோடு, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.
தமிழ் திரையுலகில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது.
தற்போது ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின் நடிக்கும் ‘சவரக்கத்தி’ மற்றும் சசிகுமார், மகிமா நம்பியார் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களில் மட்டும் பூர்ணா நடித்து வருகிறார்.
சவரக்கத்தி படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை பூர்ணா, கொடி வீரன் படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளுக்காக மொட்டையடித்து நடித்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகை பூர்ணா இருப்பதினால், மொட்டை அடித்து நடித்துள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
நடிகைகள் என்றால்., அவர்களுடைய வாழ்வில் சந்தோசமாக இருப்பார்கள் என்று அனைவரும் பொதுவாக கருதுவது உண்டு.
ஆனால், அவர்களும் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு நடிகை பூர்ணா ஒரு உதாரணம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#