சொன்னது நம்ம அனுஷ்கா தானா?: உலக அதிசயமா இருக்கே

அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்ததை பார்த்து தான் இப்படி பலரும் கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிரபாஸ், அனுஷ்கா
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா ஷெட்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசவே மாட்டார். பாகுபலி படத்தில் நடித்தபோது அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. அந்த பேச்சு இன்னும் அடங்கியபாடில்லை. அது குறித்து பிரபாஸ் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறாரே தவிர அனுஷ்கா இதுவரை வாய் திறக்கவில்லை.

கொள்கை
படம் குறித்து எது கேட்டாலும் பதில் அளிப்பேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதே அனுஷ்காவின் பாலிசி. இந்நிலையில் அவர் அதிசயமாக தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். இந்த சங்கராந்திக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெங்களூரில் பெற்றோருடன் கொண்டாடப் போகிறேன் என்றார். இந்த தகவலுக்கே அடேங்கப்பா, அனுஷ்கா பேசிட்டாரே என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

நிசப்தம்
அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை.

பயம்
படத்தில் நடிப்பதோடு சரி விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று சொல்பவர் இல்லை அனுஷ்கா. ஆனால் இம்முறை அவர் விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்தால் தனது திருமணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்பார்களோ என்று அனுஷ்கா அஞ்சுவதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!