தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் குறும்படத்தில் நடித்துள்ளார்.
சின்னசிறு பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து கலகலப்பாக நடித்துள்ளார். வீடியோவை பார்ப்பதற்கே அழகாக அமைந்துள்ளது.
சூர்யா சொல்லும் அறிவுரைகளை கேட்டு அவரது ரசிகர்களும் மக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.