கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் விஜய் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாவதாக சில சில வதந்திகள் பரவிய நிலையில், ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.