பிரபல நடிகை மன உளைச்சலில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!


நடிகை தீபிகா படுகோன் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது. படத்திற்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்படவில்லை.

வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனுக்கும், இயக்குனர் பன்சாலிக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தபடி உள்ளன. படம் வெளியாவதே பெரும் கேள்விக்குறியில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தீபிகா மற்ற பட ஷூட்டிங்களை கேன்சல் செய்துள்ளாராம். மேலும் வரும் 28 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளார்.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அவ்விழாவில் நடிகை தீபிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருந்தார். மிரட்டல்களுக்கு பயப்பட போவதில்லை, தயிரியமாக சமாளிப்பேன் என கூறியவர் உளைச்சலால் வீட்டிற்குள் முடங்கியுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#