நடிகை ராய் லட்சுமி முதன் முதலாக ஜூலி-2 என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது. இந்நிலையில் ராய் லட்சுமி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜூலி படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் தவறான தகவல் பரவியுள்ளதாக தெரிவித்தார்.
ட்ரைலரை பார்த்தால் அப்படிதான் தோன்றும் முழுபடத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபத்திரம் மீது அனுதாபம் வரும் என கூறினார்.
சினிமாவில் படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் பட வாய்ப்புகள் பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடுடன் சொல்லி வருகிறார்கள் ஆனால் தனக்கு அது போன்ற எந்த அனுபவமும் இல்லை என்றார்.
பட வாய்ப்புக்காக 4 வருடங்களாக போராடிய போது தனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் ராய் லட்சுமி கூறியுள்ளார்.
மேலும் பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜெஸ்ட் செய்து போகுமாறு கூறினார்கள்.
அதற்கு நான் சம்மதித்து இருந்தால் நான் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார். ராய் லட்சுமியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#