சிம்பு, நயன்தாரா, ரீமாசென் போன்றோர் நடிப்பில் கடந்த 2006ல் வெளிவந்த படம் வல்லவன். இப்படத்தில் நடித்ததை பற்றி அப்படத்தில் சிம்புவின் தோழியாக நடித்த சந்தியா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், இப்படத்தில் என்னிடம் சொன்ன கதையில் இருந்து முற்றிலும் வேற கதையை தான் படமாக்கியுள்ளனர். என்னிடம் சொன்ன கதையில் எனக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் உள்ளது என்று ரீமாசென் சந்தேகப்பட்டு என்னை கடத்துவார்.
ஆனால் படமாக்கப்பட்டது வேற கதை. மேலும் அப்படத்தின் படப்பிடிப்பில் எந்தவொரு ஒழுக்கமும் இல்லை. ஷூட்டிங் 8 மணிக்கு என்று சொன்னால் 11, 12 மணிக்கு தான் ஆரம்பிக்கும்.
ஆனால் சிம்புவை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.