சரியா சொல்லுங்க அப்பிடியா இல்லை இப்பிடியா..? விஷாலை கலாய்க்கும் எஸ்.வி. சேகர்..!!


தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட பூட்டை உடைப்பேன் என்று அடம்பிடித்து கைதாகி மாலையில் விடுதலை ஆனார் விஷால். நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன் என்று விஷால் தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் விஷாலிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது,

“நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன்”விஷால் சரியா சொல்லுங்க அப்பிடியா இல்லை இப்படியா. ”

முறைகேடு செய்வது நல்லது என்றால் அதை தொடர்ந்து செய்வேன்” என்று கலாய்த்துள்ளார் எஸ்.வி. சேகர்.

விஷால் தான் கைது செய்யப்பட்டது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களோ அந்த ரூ. 7 கோடி என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரூ. 7 கோடி பிரச்சனை பெரிய பிரச்சனை ஆகும் போன்று. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் விஷால் பல முறைகேடுகள் செய்துள்ளதாக சில தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!