இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய நடிகர்..!! யாருக்காக தெரியுமா..?


டி.ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக நடிகர் சிம்புவுக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைப்புலி எஸ். தாணு.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நல்ல பெயர் கிடையாது. படப்பிடிப்புக்கு எப்போதுமே தாமதமாகத்தான் வருவாராம். அப்படியே வந்தாலும் சில சீன்களில் மட்டும் நடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவாராம்.

இதனாலேயே பல தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இவரை அவரது படங்களில் ஒப்பந்தம் செய்வதில்லை. அப்படி நடித்துக் கொடுத்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறுவதில்லை. இதனால், தற்சமயம் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.


இந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்னம் சிம்புவுக்கு தன் படத்தில் ஒரு சான்ஸ் கொடுத்துள்ளார். இதற்கிடையில் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும்படி, டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் சிம்புவுக்கு இந்த வாயப்பு கிடைத்துள்ளதாம்.

சிம்புவை வைத்து ஏற்கனவே தொட்டி ஜெயா படத்தை தயாரித்தவர் எஸ். தாணு, அதனால் புதிய படத்தில் நடிக்கும் முன்பாக சிம்புவிடம் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு தான் நடிக்க வைக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#