நெட்டிசன்களால் நடிகை சாய் பல்லவிக்கு இப்படியொரு நிலைமையா..?


2015ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான ‘பிரேமம்’ படம் மூலம் மலையாள ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையானவர் சாய் பல்லவி. அந்தப் படத்திற்காக மலையாளத்தில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தார். அதன்பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் தனது நடிப்பால் அசத்தினார். மலையாளம், தெலுங்கு அறிமுகங்களை முடித்துவிட்டுத்தான் தமிழ் பக்கம் வந்தார்.

விஜய் இயக்கிய ‘தியா’ படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டுப் போனது. தற்போது அவர் நாயகியாக நடித்துள்ள இரண்டாவது படமான ‘மாரி 2’ படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர், மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும் சாய் பல்லவியை ஒரு தரப்பினர் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள்.


அவரை ‘எமோஷன் குயின்’ என வர்ணித்து, கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. மீம்ஸ் கிரியேட்டர்களிடம் அதிகம் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ். அவருக்கடுத்து இப்போது புதிதாக சிக்கியுள்ளவர் சாய்பல்லவி. இருவருமே அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் கொஞ்சம் ஓவராகவே நடிக்கிறார்கள் என்ற கருத்து அந்த மீம்ஸ்களில் இடம் பெற்றுள்ளது.

‘மாரி 2’ படம் வெளிவந்த பின்தான் சாய்பல்லவியின் நடிப்பு எப்படி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறப் போகிறது என்பது தெரிய வரும். அதுவரை இப்படிப்பட்ட மீம்ஸ்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!