சுற்றி வளைத்த ரசிகர்கள்.. முகம் சுழிக்காமல் விஜய் சேதுபதி என்ன செய்தார் தெரியுமா..?


கோலிவுட்டின் பிசியான நடிகர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடி நடிக்கிறார். விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.

விஜய் சேதுபதியிடம் தான் ஒரு பெரிய நடிகன் என்ற திமிரே கிடையாது. விழாக்களுக்கு சாதாரண ஆள் போன்று வரும் அவர் எந்த ரசிகன் வந்து செல்ஃபி கேட்டாலும் முகம் சுளிக்காமல் போஸ் கொடுப்பார். அவரை மக்கள் செல்வன் என்று சொல்வது சும்மா பேச்சுக்கு இல்லை. அவரின் குணத்திற்காக தான்.

எக்ஸ்ட்ரா புகழக் கூடாது என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


அதனால் நாம் விஜய் சேதுபதியை எக்ஸ்ட்ரா புகழாமல் நிறுத்திக் கொள்வோம். ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு நடிகர் சிக்கினால் நிச்சயம் விஜய் சேதுபதியை போன்று நடந்து கொண்டிருக்க மாட்டார்.

விஜய் சேதுபதியை பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டு தோளில் கையை போட்டு செல்ஃபி எடுத்தனர். கூட்டத்தில் இருந்து வெளியே வர முடியாத விஜய் சேதுபதி கடுப்பாகி அவர்களை திட்டாமல் உரிமையோடு டேய் விடுங்கடா என்று கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பிரச்சனையாகியிருக்கலாம். கோபப்பட்டு ரசிகர்களின் கையையோ அல்லது செல்போனையோ தட்டிவிட்டிருக்கலாம். ஆனால் விஜய் சேதுபதி இந்த இரண்டையுமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!