துபாயில் முன்னணி இந்திய பாடகர் கைது – 17 வயது பெண் கொடுத்த பரபரப்பு புகார்..!!


சினிமா துறையில் பாலியல் தொந்தரவுகள் அதிகம் இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ள நிலையில் பல பிரபலங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் தொடர்கதை ஆகியுள்ளது.

தற்போது பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங் ஒரு சர்ச்சையான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மிகா சிங் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை துபாய் போலீஸ் கைது செய்துள்ளது.

அவர் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சியில் பாட சென்றிருந்த நிலையில் கைதாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சில வருடங்கள் முன்பு பிரபல நடிகை ராக்கி சாவந்த்துக்கு மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த மிகா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!