செம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி – ஷாக்கான ரசிகர்கள்…!!


பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இதில் காதல் ஜோடிகளாக நடிப்பவர்கள் கார்த்திக்-ஷபானா.

இவர்கள் நிஜ காதலர்களாக மாற வேண்டும் என்று பல ரசிகர்களின் ஆசை, ஆனால் கார்த்தி அவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ஷபானாவிடம், கார்த்திக்கை காதலிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என்னிடம் பலர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது என தெரியவில்லை, ஆனால் என் பதில் இதுதான். அவருடன் காதல் உள்ளது என்றும் சொல்ல மாட்டேன் இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்.

கடைசியில் கேள்வி கேட்டவர்களையே மொத்தமாக குழப்பிவிட்டுவிட்டார் ஷபானா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!