இருக்கிற வேலையை விட்டுட்டு ப்ரியங்கா-நிக் திருமண வரவேற்புக்கு சென்ற மோடி..!!


பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸுக்கும் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் வைத்து இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார். ஜோத்பூரில் நடந்த திருமணத்திற்கு மோடி வருவார் என்று கூறப்பட்ட நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.


தீபிகா படுகோனேவின் திருமண வரவேற்பு உடையை விட ப்ரியங்காவின் உடை நன்றாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதாக கூறப்படுகிறது.

ப்ரியங்கோ சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸை திருமணம் செய்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்து திருமணம் செய்துள்ளார் ப்ரியங்கா என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை.

திருமணத்திற்கு பிறகும் ப்ரியங்கா தொடர்ந்து படங்கள், ஹாலிவுட் டிவி சீரியலில் நடிக்க உள்ளார். அவரும், நிக் ஜோனஸும் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு பங்களாவில் வசிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!