என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே.. ஆட்டோ ஓட்டுனருக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்..!!


உன் குடும்பத்தை பார், முடிந்தால் என் படத்தை பார் என்று திரையுலகில் சொல்லியவர் அஜித்குமார் ஒருவராக தான் இருக்க முடியும். நமக்கு முதலீடே ரசிகர்கள் தரும் பணம் தான் என தெரிந்தும் அஜித்தின் இந்த கூற்று பல தரப்பினரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

ஆனால் அதையும் தாண்டி பல சம்பவங்களை அஜித் செய்துள்ளார். அதில் பல நமக்கு தெரியாமல் மறைமுகமாகவே இருந்து விடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை தான் நான் உங்களுக்கு தெரியப்படுத்த உள்ளேன்.

அஜித் எப்போதும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டோ ஸ்டானில் இருப்பவர்களுக்கு கை காட்டி செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது நீண்ட நாட்களாக இருந்த ஆட்டோவை மாத தவணை கட்டவில்லை என சொல்லி எடுத்து சென்றுள்ளனர்.

இதை அறிந்த அஜித் அந்த ஓட்டுனரை தனது வீட்டுக்கு அழைத்து புதியதாக ஒரு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அஜித் கேட்ட ஒரு கேள்வி ’என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே’ என்பது தான் அந்த ஓட்டுனருக்கு கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!