தப்பு செய்யாதவங்க மீடு, வீடு பற்றி கவலைப்படாதீங்க..!! இமான் ஆவேசம்..!!


தப்பு செய்யாதவங்க மீடூ பிரச்சினை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று இசையமைப்பாளர் இமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எல்லா துறையிலும் பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால், திரைத்துறையில் நடப்பவை பூதக்கண்ணாடி வழியாக பூதாகரமாக காட்டுகிறார்கள்.

தப்பு செய்யாதவர்கள் மீடு, வீடு என எந்த இயக்கத்துக்கும் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு மனிதனாக நாம் சரியாக இருந்தால் எங்கேயும் பிரச்சினை இருக்காது. இவையெல்லாம் தனி நபர் சரியாக இல்லாததால் வரும் பிரச்சினைகள்தான். மற்றவர்களை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது மற்ற விரல்கள் நம்மை நோக்கியே பாய்கிறது. எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

தர்மம் வெல்லும். தூய மனதுடன் எந்த தொழில் ஆக இருந்தாலும் ஆண் பெண் பேதமின்றி உண்மையாக நேர்மையாக வேலை செய்ய வேண்டும். “யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு விடை கிடைக்க வேண்டும் என நானும் காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!