வைரமுத்துகிட்ட கேள்வி கேட்காத மீடியாகிட்ட நான் எதுக்கு பதில் சொல்லணும்.. சின்மயி ஆவேசம்..!!


மீடூ குறித்த பேச்சுகளால் நாங்கள் ஏற்கனவே வெறுப்பில் இருக்கிறோம் என சின்மயி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற 150 ஆண்டு விழாவில் முதலில் பாடுவதாக ஒப்புக்கொண்ட சின்மயி, பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்தே வைரமுத்துவுக்கும் சின்மயியிக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிர்நீதிமன்ற 150 வது விழாவை ஏற்பாடு செய்த மகராஜன், வைரமுத்துவுக்காக மற்றவர்களை கன்வின்ஸ் செய்வார் என்று சின்மயியின் அம்மா பேட்டியளித்ததையடுத்து, சின்மயி மற்றும் அவரது அம்மா மீது வழக்கு தொடரவிருப்பதாக மகராஜன் தெரிவித்துள்ளார்.

இநிலையில், இதுகுறித்து சின்மயி தரப்பில் கூறியதாது, மீ டு பேச்சுகளால ஏற்கெனவே வெறுப்பில் இருக்கிறோம். ஆமாம் உயர்நீதிமன்ற நிகழ்ச்சியில் பாடவில்லை. ஆனா வைரமுத்துகிட்ட போய் ஒரு கேள்வி கேட்காத மீடியாகிட்ட, நான் எதுக்கு கேள்விக்கு பதில் சொல்லணும்? என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!